தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது

தங்கம் கடத்தியவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது

by Staff Writer 10-05-2018 | 12:08 PM
COLOMBO (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு தங்கம் கடத்தப்பட்டமை தொடர்பில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 100 கிராம் பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுக்கள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இரண்டு கிலோகிராம் நிறையுடைய இந்த தங்க பிஸ்கட்டுக்கள் சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கண்டி தெய்யன்வல பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

ஏனைய செய்திகள்