கொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர்வெட்டு

கொலன்னாவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணித்தியால நீர்வெட்டு

by Staff Writer 10-05-2018 | 12:38 PM
COLOMBO (News 1st) கொலன்னாவை மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகளில், இன்று பகல் 2 மணியிலிருந்து 10 மணித்தியாலம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று பகல் 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டவுள்ளது. கொலன்னாவை, மீதொடமுல்ல, சேதவத்த மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.