சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக மனு

இலங்கை - சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக மனு தாக்கல்

by Staff Writer 10-05-2018 | 12:18 PM
COLOMBO (News 1st) இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த உடன்படிக்கையூடாக தொழில்சார் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு பாரிய அச்சுருத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய குறித்த அடிப்படை உரிமைகள் மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சபீர் குறிப்பிட்டுள்ளார்.