புதிய அமைச்சரவையின் வர்த்தமானி ஜனாதிபதியிடம்

அமைச்சரவையின் துறைசார் பொறுப்புக்கள் அடங்கிய வர்த்தமானி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கையளிப்பு

by Staff Writer 10-05-2018 | 7:16 AM
COLOMBO (News 1st) புதிய அமைச்சரவைக்கான துறைசார் பொறுப்புக்கள் அடங்கிய வர்த்தமானி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு இன்று கையளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டே தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் வர்த்தமானியை விரைவு அச்சிடுதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதற்கமைய எதிர்வரும் இரண்டு தினங்களில் குறித்த வர்த்தமானியை அரச அச்சகத்திற்கு அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலாளர் கூறியுள்ளார். அண்மையில் மறுசீரமைக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் பிரகாரம் 18 அமைச்சர்களும், எட்டு இராஜாங்க அமைச்சர்களும், பிரதி அமைச்சர்கள் 10 பேரும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்