by Staff Writer 10-05-2018 | 11:11 AM
COLOMBO (News 1st) போலி பெயரொன்றில் முகப்புத்தக கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொலன்னறுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் உரிமையாளர் என தெரிவித்துள்ள சந்தேகநபர், கணக்காளர்களிடம் ஈசி கேஸ் முறையில் நிதி மோசடி செய்துள்ளமை விசாரணகைளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலன்னறுவ பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 19 வயதான சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.