IPL இல் திறமையை வௌிப்படுத்தியவர்களுக்கு வாய்ப்பு

IPL இல் திறமையை வௌிப்படுத்தியவர்களுக்கு இந்திய ஒருநாள் குழாத்தில் வாய்ப்பு

by Bella Dalima 09-05-2018 | 5:47 PM
இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தொடரில் 3 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கான இந்திய குழாத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை இன்டியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் லோகேஷ் ராகுல், அம்பாட்டி ராயுடு, வொஷிங்டன் சுந்தர் மற்றும் சித்தார்த் காஉல் ஆகியோருக்கு இந்திய ஒருநாள் குழாத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் மீண்டும் இந்திய குழாத்தில் இடம்பிடித்துள்ளார். அஜின்கெயா ரஹானே, மனிஷ் பாண்டே, கேதர் யாதவ், மொஹமட் சமி ஆகியோர் இந்திய ஒருநாள் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.