நாட்டின் பிரச்சினைகளை ஜெனிவாவில் பேச விரும்பவில்லை

நாட்டின் பிரச்சினைகளை ஜெனிவாவில் பேச விரும்பவில்லை: மனோ கணேசன்

by Bella Dalima 09-05-2018 | 9:27 PM
Colombo (News 1st)  நாட்டின் பிரச்சினைகளைக் கொண்டு சென்று ஜெனிவாவில் பேச தான் விரும்பவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். எம்மை விசாரிக்கும் அளவிற்கு வௌ்ளைக்காரர்கள் தூயவர்கள் அல்லவென குறிப்பிட்ட அமைச்சர் மனோ கணேசன், அது தொடர்பிலான பொறிமுறையை நாட்டில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அமைச்சர் மனோ கணேசன் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சில் இன்று கடமைகளை ஆரம்பித்தார். நாவலையில் உள்ள தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் அவர் தனது கடமைகளை ஆரம்பித்தார். இதன்போதே அமைச்சர் இந்த விடயங்களைக் கூறினார்.  

ஏனைய செய்திகள்