கண்டி சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

கண்டி சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

by Staff Writer 09-05-2018 | 12:59 PM
COLOMBO (News 1st) அண்மையில் கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான விசாரணையை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுக்கவுள்ளது. எழுத்துமூல மற்றும் வாய்மொழி சாட்சியங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மாதம் 12 ஆம் திகதி சாட்சி பதிவு விசாரணைகள் நிறைவடையவுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வன்முறைகளுடன் ஏதாவது கட்சிகளுக்கு தொடர்புள்ளதா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 27 பேர் கைது செய்யப்ட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.