கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீ பரவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் தீ பரவல்

by Staff Writer 09-05-2018 | 9:04 AM
COLOMBO (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான நிலைய இராணுவத்தின் தீயணைப்பு வீரர்கள் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ காரணமாக விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற விற்பனை பிரிவை அண்டிய பகுதிகளில் அதிக புகை பரவியுள்ளது. தீயினால் விமான பயணங்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.