by Staff Writer 08-05-2018 | 11:32 AM
COLOMBO (News 1st) ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 100 கிராம் நிறையுடைய தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து இன்று காலை நாட்டிற்கு வருகைத் தந்த இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
56 மற்றும் 50 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.