by Staff Writer 08-05-2018 | 11:46 AM
COLOMBO (News 1st) இத்தாலியில் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இத்தாலியில் மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்றைய தினம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், இத்தாலி மீண்டும் பொதுத் தேர்தலை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
அவ்வாறில்லையெனின், இந்த ஆண்டு நிறைவடையும் வரை இடைக்கால அரசாங்கம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.