எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துகொண்ட 16 பேர்

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர்

by Bella Dalima 08-05-2018 | 8:54 PM
Colombo (News 1st)  அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர் அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். பதவி விலகிய எஸ்.பி. திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே,ஜோன் செனவிரத்ன,சந்திம வீரக்கொடி, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, சுமேதா ஜயசேன, லக்‌ஷ்மன் வசந்த பெரேரா, டிலான் பெரேரா, தாரானாத் பஸ்நாயக்க, சுசந்த புஞ்சி நிலமே, அனுர பிரியதர்சன யாப்பா, அனுராத ஜயரத்ன, டி.பி.ஏக்கநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரே எதிர்க்கட்சியில் அமர்ந்துகொண்டனர். பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றதன் பின்னர் அவர்களை வரவேற்க பாராளுமன்ற நுழைவாயிலில் நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.