மே தினக் கூட்டத்தின் போது கவனயீர்ப்பு போராட்டங்கள்

ஶ்ரீ. சு.க. மேதினக் கூட்டம் நடைபெற்ற வளாகத்திற்கு முன்பு கவனயீர்ப்பு

by Staff Writer 07-05-2018 | 8:16 PM
COLOMBO (News 1st) மாவடிவேம்பில் ஶ்ரீ லங்கா சுத்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்ற வளாகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு சுலோகங்களை கைகளில் ஏந்தியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, சம்பள பிரச்சினைக்கு தீர்வு கோரி ஶ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம் நடைபெற்ற வளாகத்திற்கு முன்பாக ரயில் பாதுகாப்பு கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். கடந்த ஏழு வருடங்களாக நாளொன்று 250 ரூபா சம்பளத்திற்கு தொழில்புரிவதாகவும் இந்த பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறு கோரி அவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். https://www.youtube.com/watch?v=qKMS3x1tFhI