2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்க தேசிய வேலைத்திட்டம்

2020 ஆம் ஆண்டுக்குள் 2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்க தேசிய வேலைத்திட்டம்

by Staff Writer 06-05-2018 | 4:36 PM
COLOMBO (News 1st) எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் 2000 ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் தொழில்துறையினருக்கு தெளிவுபடுத்துவதற்காக மாகாண மட்டத்திலான செயலமர்வுகளை நடத்துவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், செயலமர்வொன்றை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.