சமுர்த்தியும் மத்திய வங்கியின் கீழ் -  பிரதமர்

சமுர்த்தியும் மத்திய வங்கியின் கீழ்: மே தினக் கூட்டத்தில் பிரதமர் தெரிவிப்பு

by Staff Writer 06-05-2018 | 8:27 PM
COLOMBO (News 1st) ஐக்கிய தேசியக் கடசியின் மே தினக் கூட்டம் இன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில், ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். சமுர்த்தி நிதியம், சமுர்த்தி வங்கி தொடர்பிலும் பிரதமர் இதன்போது கருத்துத் தெரிவித்தார். இதன்போது, புதிய நீதிமன்ற சட்டத் திருத்தம் எதிர்வரும் ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநித்துவப்படுத்தும் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது கூறினார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும், பின் வரிசை குழுவினரும் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமை பலரின் கவத்தையும் ஈர்த்திருந்தது. https://www.youtube.com/watch?v=nfYfB_w34qQ