பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூரி

74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது ரோயல் கல்லூரி

by Bella Dalima 05-05-2018 | 6:30 PM
Colombo (News 1st)  கண்டி திரித்துவக் கல்லூரிக்கு எதிரான பிரெட்பி கேடயத்தின் இரண்டாம் கட்டத்தில் 27-19 எனும் கணக்கில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது. கொழும்பில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்டத்தில் 39 -7 எனும் புள்ளிகள் பிரகாரம் ரோயல் கல்லூரி முன்னிலை பெற்றது. இரண்டு கட்டங்களின் முடிவில் 66 -26 எனும் கணக்கில் வெற்றியீட்டிய ரோயல் கல்லூரி அணி, 74 ஆவது பிரெட்பி கேடயத்தை சுவீகரித்தது. ரோயல் கல்லூரி அணி பிரெட்பி கேடயத்தை சுவீகரித்த 33 ஆவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.