by Bella Dalima 05-05-2018 | 3:51 PM
Colombo (News 1st)
அரச மரக்கூட்டுதாபனத்தின் புதிய தலைவராக அனுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனக்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (04) மாலை அனுருத்த பொல்கம்பொலவிற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் பெற்றமை தொடர்பில் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.