வெங்காய செய்கையாளர் பிரச்சினை ஆராயப்படவுள்ளது

பெரிய வெங்காய செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

by Bella Dalima 04-05-2018 | 4:52 PM
  Colombo (News 1st)  பெரிய வெங்காய செய்கையாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விவசாய இராஜாங்க அமைச்சர் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. பெரிய வெங்காய செய்கை வீழ்ச்சியடைவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.