by Bella Dalima 04-05-2018 | 8:54 PM
Colombo (News 1st)
மூன்றாவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நாளை (05) ஆரம்பமாகவுள்ளன.
இந்தப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைத்தீவு, நேபாளம், பூட்டான மற்றும் இலங்கை ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இலங்கை சார்பாக 83 வீர, வீராங்கனைகள் போட்டியிடுகின்றனர்.
வீரகெப்பெட்டிபொல - அக்குரம்பொட மத்திய மகா வித்தியாலயத்தின் அருண தர்ஷன இலங்கை குழாத்தின் தலைவராக செயற்படவுள்ளார்.