வேயங்கொடயில் மனைவியை கொலை செய்த கணவர் கைது

வேயங்கொடயில் மனைவியை தாக்கிக் கொலை செய்த கணவர் கைது

by Staff Writer 03-05-2018 | 12:13 PM
COLOMBO (News 1st) வேயங்கொட கட்டுவஸ்கொட பகுதியில் தனது மனைவியை தாக்கி கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடற்பயிற்சி உபகரணத்தினால் தனது மனைவியை தாக்கி நேற்றிரவு கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 27 வயதுடைய பெண்ணொருவரே இதன்போது உயிரிழந்துள்ளார். சடலம் மீதான பிரேதபரிசோதனை இன்று வத்துபிட்டிவல வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது. இதேவேளை, வீரவில கம்பிவத்த 80 ஏக்கர் உடவில பகுதியில் உள்ள தமது வீட்டின் முன்றலில் காயமடைந்த நிலையில் கீழே வீழ்ந்திருந்த ஒருவர் திஸ்ஸமஹராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.