இந்தியாவை தாக்கிய புழுதிப்புயல்: 74 பேர் பலி

ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தை தாக்கிய புழுதிப்புயல் காரணமாக 74 பேர் பலி

by Staff Writer 03-05-2018 | 1:22 PM
இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 74 பேர் வரை பலியாகியுள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று (02) வீசிய கடும் புழுதிப்புயல் காரணமாக மரங்கள் மின்கம்பங்களின் மீது முறிந்து வீழ்ந்துள்ளதால் ராஜஸ்தானின் பல பகுதிகளில் மின்துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. பாரத்பூர் பகுதியிலே​யே அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. நிவாரணப் பணிகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார்.