பாடசாலை மாணவர் மீது தாக்குதல் (CCTV)

குளியாப்பிட்டியில் மனிதாபிமானமற்ற வகையில் பாடசாலை மாணவர் மீது தாக்குதல் (CCTV)

by Bella Dalima 03-05-2018 | 7:12 PM
Colombo (News 1st)  குளியாப்பிட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர் ஒருவரை சிலர் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையேயான வாக்குவாதம் தாக்குதலாக மாறியுள்ளது. தாக்குதலுக்குள்ளான 18 வயதான மாணவன் குருநாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது மாணவன், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நாளை (04) வரையில் வாரியபொல நன்னடத்தை பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மேலும் மூவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.