by Staff Writer 03-05-2018 | 11:12 AM
COLOMBO (News 1st) பதுளை - ஹல்துமுல்லையிலிருந்து கினிகத்கல பகுதிக்கு செல்லும் வீதியை அண்மித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்வரிவு இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
மண்சரிவு காரணமாக ஹல்துமுல்லையிலிருந்து கினிகத்கல பகுதிக்கு செல்லும் வீதி முழுமையாக சேதடைந்துள்ளது.
குறித்த வீதியை அண்மித்து வாழ்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த மக்கள் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மண்சரிவு காரணமாக கிரிமெட்டிய, நிதன்கொட, கினிகத்கல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350 மேற்பட்ட மக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=z0lShMjUIgk