by Bella Dalima 03-05-2018 | 5:26 PM
Colombo (News 1st)
அரிசி இறக்குமதியை இடைநிறுத்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல் அறுவடை சந்தைக்கு வழங்கப்படுவதால், விவசாயிகளுக்கு தமது நெல்லை விற்பனை செய்ய சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.