இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மறைவைத் தொடர்ந்து இன்று தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

by Staff Writer 02-05-2018 | 7:33 AM
COLOMBO (News 1st) சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் அரச அனுசரணையில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று மாலை 4 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது. இறுதிக்கிரியைகளை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தை சுற்றி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மறைவைத் தொடர்ந்து இன்று தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை சினிமாத்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 99 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.  

ஏனைய செய்திகள்