இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு அதிகரிப்பு

இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு 1000 கோடி அமெரிக்க டொலராக அதிகரிப்பு

by Bella Dalima 01-05-2018 | 6:01 PM
Colombo (News 1st)  இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு 1000 கோடி அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. வெளிநாட்டு முதலீடு அதிகரித்தமை, அரசாங்கத்திற்கு கிடைக்கும் வெளிநாட்டுக் கடன் அதிகரித்தமை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் கிடைக்கும் கடன் தொகை, அரசாங்கத்தின் நிதி மற்றும் பாதுகாப்பு முதலீடு அதிகரித்தமை ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு நாணய இருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.