மறுசீரமைப்பின் பின்னர் ஜோன் அமரதுங்க கருத்து

அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட பதவிகளுடன் மகிழ்ச்சியோடு வீடு சென்றனர்: ஜோன் அமரதுங்க

by Bella Dalima 01-05-2018 | 5:31 PM
Colombo (News 1st)  அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் அமைச்சர் ஜோன் அமரதுங்க கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டார். அமைச்சர்கள் அனைவரும் தமக்கு வழங்கப்பட்ட பதவிகளுடன் மகிழ்ச்சியோடு வீடு சென்றதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க இதன்போது தெரிவித்தார். மேலும், அவரின் அமைச்சுப் பதவியை ரவி கருணாநாயக்கவிற்கு வழங்கவுள்ளதாக வௌியான தகவல் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, ''சிலர் கனவு காண்கின்றனர். அது சாத்தியப்படாது. நான் என் பொறுப்பை சரிவர நிறைவேற்றுகிறேன் என்பதை ஜனாதிபதி அறிவார், பிரதமரும் அறிவார். அதனால் என்னை மாற்றவில்லை'' என தெரிவித்தார்.