போட்டிபோடும் பஸ்களினால் அதிக விபத்துக்கள்

போட்டிக்கு செலுத்தப்படும் பஸ்கள்: கேள்விக்குறியாகியுள்ள மக்களின் பாதுகாப்பு

by Staff Writer 30-04-2018 | 8:38 PM
COLOMBO (News 1st) யாழ். மாவட்டத்தில் உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் போட்டிக்கு செலுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். யாழ். மாவட்டத்தில் உள்ளூர் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்களில் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக மக்கள் கூறுகின்றனர். தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தனமான பஸ்கள் போட்டிக்கு செலுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமுள்ளதுடன்,பயணிகளை ஏற்றமால் செல்கின்ற சந்தர்ப்பங்களும் உள்ளன. பஸ்களிலிருந்து அதிகளவிலான புகை வௌியேற்றப்படுவதால் மக்கள் அசெளகரியத்திற்குள்ளாகின்றனர். விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்னதாக அவற்றை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்... https://www.youtube.com/watch?v=nLbM9oP6xYg