பண்டாரவளை நீதவான்நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ

பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ

by Staff Writer 30-04-2018 | 2:15 PM
COLOMBO (News 1st) பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ பரவியுள்ளது. பண்டாரவளை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன், தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்நிலையில், குறித்த பகுதிக்கு இரசாயன பகுப்பாய்வாளர்களை வரவழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.youtube.com/watch?v=GH1BrsUVyNA