கொக்குவில் வாள்வெட்டு தாக்குதல்: 2 பெண்கள் காயம்

கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்: 2 பெண்கள் காயம்

by Staff Writer 30-04-2018 | 7:35 PM
COLOMBO (News 1st) யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண்கள் இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 34 வயதான பெண்ணொருவரும் அவருடைய தாயும் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த சி.சி.ரி.வி காணொளி பொலிஸாரினால் வௌியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். சம்பவம் தொடர்பில் யாழ்.தலைமையக பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.youtube.com/watch?v=RwN5hR8My-Y