கரும்புஉற்பத்தி தொடர்பில் அரசாங்கம் புதியதீர்மானம்

கரும்பு உற்பத்தி தொடர்பில் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தீர்மானம்

by Staff Writer 29-04-2018 | 5:24 PM
COLOMBO (News 1st) கரும்பு உற்பத்தி தொடர்பில் பாகிஸ்தானுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்பிரகாரம், இலங்கை மற்றும் பாகிஸ்தானினுள்ள கரும்பு ஆலைகளின் உபகரணங்கள் மற்றும் திரவியங்களை பகிர்வது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நாட்டின் கரும்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாகிஸ்தானின் பைசலாபாத் கரும்பு ஆராய்ச்சி அபிவிருத்தி சபை மற்றும் அந்நாட்டின் கரும்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. இதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட பத்திரங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.