432 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 432 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

by Staff Writer 29-04-2018 | 4:36 PM
COLOMBO (News 1st) வெசாக் தினத்தை முன்னிட்டு 432 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல் தெனிய கூறியுள்ளார். அபராதத்தை செலுத்த தவறிய கைதிகளும், 70 வயதுக்கு மேற்பட்ட 10 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த கைதிகளுமே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். விடுதலை செய்யப்படும் கைதிகளில் 4 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.youtube.com/watch?v=4Wj6p0wbN74