மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட்

மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட்: தலைவர்கள் நியமனம்

by Bella Dalima 28-04-2018 | 9:46 PM
Colombo (News 1st)  மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான அணிகளின் குழாம் பெயரிடப்பட்டுள்ளது. நான்கு அணிகளின் பங்குபற்றுதலோடு நடைபெறவுள்ள மாகாண அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் செயற்படவுள்ளதோடு, உபுல் தரங்க காலி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடரில் கண்டி அணியை அஞ்சலோ மெத்தியூஸ் வழிநடத்தவுள்ளதோடு, தம்புள்ளை அணியின் தலைவராக குசல் ஜனித் பெரேரா செயற்படவுள்ளார்.