நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2,630 பேர் கைது

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு: 2,630 சந்தேகநபர்கள் கைது

by Bella Dalima 28-04-2018 | 4:52 PM
Colombo (News 1st)  இன்று அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 2,630 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 938 பேர் அடங்குகின்றனர். வெவ்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 8,276 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் செலுத்திய 270 சாரதிகளும், ஹெரோயின் உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த 633 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.