கடுவளை முதல் ஹேவாகம வரையான பகுதி தற்காலிகமாக மூடல்

கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் கடுவளை முதல் ஹேவாகம வரையான பகுதி தற்காலிகமாக மூடல் 

by Bella Dalima 28-04-2018 | 3:57 PM
Colombo (News 1st)  இன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கொழும்பு - அவிசாவளை பிரதான வீதியின் கடுவளை முதல் ஹேவாகம வரையான பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது. அப்பகுதியில் பெரஹரா இடம்பெறுவதனால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. பெரஹரா இடம்பெறும் சந்தர்ப்பங்களில் கடுவெல முதல் கொழும்பு வரை பயணிக்கும் வாகனங்கள் கடுவெல சந்தி - பண்டாரவத்த சந்தி ஊடாக களனியை சென்றடைய முடியும் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு முதல் கடுவெல வரை பயணிக்கும் வாகனங்கள், ஹேவாகம மேம்பாலத்தினூடாக பியகம பிரதான வீதிக்கு சென்று, பண்டாரவத்த சந்தியில் தெற்கு பக்கமாக திரும்பி மீண்டும் கடுவெல சந்திக்கு பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.