கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் வருடாந்த மீளாய்வு

கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் வருடாந்த மீளாய்வு மாநாடு: மொஹமட் நஷீட் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்

by Bella Dalima 28-04-2018 | 9:00 PM
கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் வருடாந்த மீளாய்வு மாநாடு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நேற்று (27) நடைபெற்றது. கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியாக Yes FM இன் அலைவரிசை பிரதானி ரம்சி காசிம் தெரிவு செய்யப்பட்டார். மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இதன்போது, வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 5 நிறைவேற்று அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர். 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நிறைவேற்று அதிகாரியை தெரிவு செய்வதற்காக ஐவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. 01. PE+ இன் கமல் குமார 02. சக்தி க்ளோபல் டிவியின் கே.சமந்த் ராஞ்ச் 03. S-lon நிறுவனத்தின் சனத் ஷமின்த்ர பண்டார 04. MBC-இன் ரம்ஸி காசிம் 05. AF Jones இன் ஷமீர் ரசூல்டீன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் வருடத்தின் சிறந்த நிறைவேற்று அதிகாரியாக YES FM மின் அலைவரிசை பிரதானி ரம்ஸி காசிம் தெரிவு செய்யப்பட்டார். கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் இணை முகாமைத்துவ பணிப்பாளர் ஷசி ராஜமகேந்திரன் மற்றும் குழுமப் பணிப்பாளர் பிரதீப் மகாராஜா ஆகியோர் வெற்றியாளர்களை அறிவித்தனர். ''வெற்றிக்காக செயற்படுங்கள்'' (ACT to WIN) என்பதே கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 41 ஆவது வருடாந்த மீளாய்வு மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்தது. கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் 1000 க்கும் அதிகமான நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் அதிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைவரின் தகவலை குழுமப் பணிப்பாளர் ஸ்ரீலால் அஹங்கம வாசித்தார்.
நாம் மீண்டும் ஒன்றிணைய வேண்டியுள்ளது. புதிய எண்ணங்களுடன் புத்தாக்கமடைய வேண்டும். புதிய துறைகளுக்குள் பாரிய முதலீடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். மகாராஜாவின் நிறைவேற்று அதிகாரிகளுக்கு நான் ஒன்றைக்கூற வேண்டும். வர்த்தகம் என்பது யுத்தமாகும். அதனால் நாம் தாமதிக்க முடியாது. துரிதமாக செயற்பட்டு தடைகளை தோற்கடித்தாலே நாம் வெற்றியாளர்களாக முடியும்
என கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத் தலைவரால் குறிப்பிடப்பட்டிருந்தது. மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் தனது உரையின் பின்னர் அங்கிருந்தவர்களுக்கு ஊக்கமூட்டும் கருத்தொன்றை வௌியிட்டிருந்தார்.
மகாராஜா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் குழுமத்தில் இருக்கும் அனைவரிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன், உங்களாலும் வெற்றி பெற முடியும். எந்த சந்தர்ப்பத்திலும் அது சாத்தியமாகும். பாதகமானவற்றுக்கு எதிராகப் போராடுங்கள்.