by Bella Dalima 27-04-2018 | 7:10 PM
Colombo (News 1st)
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவரான திலங்க சுமதிபால கடந்த 20 ஆம் திகதி தெரிவித்தார்.
எனினும், நிறைவேற்று அதிகாரிகள் குழுவின் பொதுக்கூட்டம் நடத்தப்படாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அதனை இரத்து செய்வதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.
சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம் தேர்தலை நடத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.