by Bella Dalima 27-04-2018 | 6:58 PM
Colombo (News 1st)
சமையல் எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம், 12.5 கிலோகிராம் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 245 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1676 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.