கொழும்பு, கம்பஹாவிற்கு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

கொழும்பு, கம்பஹாவிற்கு புதிய அமைப்பாளர்களை நியமித்தது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

by Bella Dalima 26-04-2018 | 8:07 PM
Colombo (News 1st)  ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக சமிந்த குமார சுதசிங்கவும் கம்பஹா தொகுதியின் புதிய அமைப்பாளராக அஜித் பஸ்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இதற்கான நிகழ்வு இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.