கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவர் கைது

அவன்ற் கார்ட் ஆயுதக் களஞ்சியசாலையின் நடவடிக்கை பிரிவு முகாமையாளராக செயற்பட்டவர் கைது

by Bella Dalima 26-04-2018 | 3:31 PM
Colombo (News 1st)  அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையின் நடவடிக்கை பிரிவு முகாமையாளராக செயற்பட்ட கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. களனி, வனவாசல பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.