இறப்பர் தொழிற்சாலை முகா​மையாளர் விளக்கமறியலில்

ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் முகா​மையாளர் தொடர்ந்தும்  விளக்கமறியலில்

by Staff Writer 25-04-2018 | 1:30 PM
COLOMBO (News 1st) ஹொரண பெல்லபிட்டிய இறப்பர் தொழிற்சாலையில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிற்சாலையின் முகா​மையாளரும், சிரேஷ்ட இரசாயன கட்டுப்பாட்டாளரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹொரண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜரப்டுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த 19 ஆம் திகதி பகல் இடம்பெற்ற அனர்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் சுகயீனமுற்றனர். இந்த சம்பவத்தை அடுத்து குறித்த தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, இறப்பர் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.