வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்திஅலுவலர் நியமனம்

வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம்

by Staff Writer 25-04-2018 | 7:29 AM
COLOMBO (News 1st) புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பாலியல வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைக்கழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்து அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தனது நியமனத்தை நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். கடந்த வருடம் வித்தியாவின் வீட்டிற்கு சென்ற ஜனாதிபதி அவர்களின் குடும்ப நிலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். https://www.youtube.com/watch?v=WtbhEx1UcU4