by Staff Writer 25-04-2018 | 1:13 PM
COLOMBO (News 1st) வானிலை மாற்றம், பலரின் வாழ்க்கையை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
விவசாயிகளே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக நாட்டிற்கு போதிய மழை வீழ்ச்சி கிடைக்கவில்லை.
இதனால் விவசாயிகள் மாத்திரமின்றி, அனைவரும் நீரைப்பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினர்.
வறட்சியினால் இன்றும் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்களுமே அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு...
01. புத்தளம் - 216,670
02. குருநாகல் - 120,803
03. மன்னார் - 101,983
04. கிளிநொச்சி - 33,624
05. முல்லைத்தீவு - 10,005
06. வவுனியா - 5,003
07. அம்பாறை - 9,116
08. திருகோணமலை - 2,684
09. அனுராதபுரம் - 10,195
10. பொலன்னறுவை - 990