டொரன்டோ விபத்தில் இலங்கை பெண் உயிரிழப்பு

டொரன்டோ விபத்தில் இலங்கை பெண் உயிரிழப்பு

by Staff Writer 25-04-2018 | 11:39 AM
COLOMBO (News 1st) கனடாவின் டொரன்டோவில் பாதசாரிகள்மீது வேன் மோதியதில் உயிரிழந்தவர்களில் ஹொரனையைச் சேர்ந்த பெண் ஒருவரும் அடங்குகின்றமை தெரியவந்துள்ளது. கனடாவின் டொரன்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வேன் மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். G7 நாடுகளின் அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் பகுதியை அண்மித்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.