உண்மை விளம்பல் விசாரணையின் 4 ஆம் கட்டம் ஆரம்பம்

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை: உண்மை விளம்பல் விசாரணையின் நான்காம் கட்டம் ஆரம்பம்

by Bella Dalima 25-04-2018 | 7:28 PM
Colombo (News 1st)  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் உண்மை விளம்பல் விசாரணையின் நான்காம் கட்டம் இன்று ஆரம்பமானது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். இஸர்டீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கஜன் மாமா என்றழைக்கப்படும் கனநாயகத்திடம் இன்று சாட்சிப்பதிவுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து நாளைய தினத்திற்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.