மின் பிறப்பாக்கல் இயந்திர திருத்தப்பணிகள் நிறைவு

நுரைச்சோலையின் முதலாவது மின் பிறப்பாக்கல் இயந்திரத்தின் திருத்தப்பணிகள் நிறைவு

by Staff Writer 24-04-2018 | 7:37 AM
COLOMBO (News 1st) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது பிறப்பாக்கல் இயந்திரம் இன்று மின் பிறப்பாக்கலுக்காக செயற்படுத்தப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த இயந்திரத்தில் புகையுடன் இந்த சாம்பல் வௌியாவதை தடுப்பதற்காக உள்ள பகுதியில் செயற்றிறன் குறைவடைந்தமையால் குறித்த மின் பிறப்பாக்கி திருத்தப்பணிகளுக்காக கடந்த 11 ம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்தது. இதில் 600 மெகாவோட் வலு மின் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.  

ஏனைய செய்திகள்