ஜாலிய விக்ரமசூரியவிற்கு பகிரங்க பிடியாணை

ஜாலிய விக்ரமசூரியவிற்கு பகிரங்க பிடியாணை

by Bella Dalima 24-04-2018 | 4:00 PM
Colombo (News 1st) நீதிமன்றத்தைப் புறக்கணித்துள்ள அமெரிக்காவிற்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வௌிநாட்டிற்கு சென்று மீண்டும் நாடு திரும்பாததால், ஜாலிய விக்ரமசூரியவிற்கு கடந்த பெப்ரவரி மாதத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுவரை நீதிமன்றத்தில் அவர் ஆஜராகாததால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.