by Staff Writer 24-04-2018 | 8:17 AM
COLOMBO (News 1st) அமைச்சரவையை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரத்திற்குள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
25 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு சென்றிருந்த ஜனாதிபதி, பிபிசி சிங்கள சேவையின் நேர்காணலின் போது இந்த விடயத்தை கூறியுள்ளார்.