by Staff Writer 23-04-2018 | 2:28 PM
COLOMBO (News 1st) வெல்லவ, பல்லேகொடுவ பகுதியில் தந்தை தனது குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று மாலை காங்கேசந்துறையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் 30 வயதுடைய தந்தையும் 8 மாத குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.