பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் மே மாதம்

பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை மே மாதம் ஆரம்பிக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி கைச்சாத்து

by Staff Writer 23-04-2018 | 8:11 PM
COLOMBO (News 1st) எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15 க்கு ஆரம்பிக்கும் வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கைச்சாத்திட்டுள்ளார். வர்த்தமானி அறிவித்தல் அச்சகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ட்டின் பெர்ணான்டோ தெரிவித்தார். விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஜனாதிபதி பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவந்தார். https://www.youtube.com/watch?v=FO_WSdpyTDc